வாயும் வார்த்தைகளும்

 _வாயும் வார்த்தைகளும்_


*மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.* (மத்தேயு 12:36)

*தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.*

*பரிசுத்த வேதம் போதிக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்"*

1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது
 - யாக் 3:5

2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3

3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3

4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது      
 - சங் 75:4

5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது
  - மத் 5:37

6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது  
- 1 தீமோ 4:7

7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது      
  - மத் 12:36

8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 15:1

9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாத           - நீதி 27:2

10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது     - நீதி 20:6

11. தீமையை பேசக்   கூடாது                  
   - யோபு 27:3

12. துர்ச் செய்தியை பேசக்கூடாது    
      - எண் 13:33

13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது        
- எபேசி 5:4

14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது
 - எபேசி 5:4

15. யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது
   - எபேசி 5:4

16. யாரையும் சபித்தல் கூடாது                          - யாக் 3:10

17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது                
   - நீதி 12:18

18. இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது    
- யூதா:16

19. கோள் செல்லுதல் கூடாது            
  - லேவி 19:16

20. நாவினால் புறங்கூறுதல் கூடாது  
- சங் 15:3

21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது    
 - யோபு 15:3

22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது    
- யோபு 15: 3

23. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது
  - சங் 120:2, 3

24. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது
 - சங் 94:4

25. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
 - சங் 64:4

26. தகாத காரியங்களை பேசக்கூடாது
  - 1 தீமோ 5:13

27. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது
- ரோ 2:1

28. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 தெச 2:5

29. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது
     - நீதி 29:20

30. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது
     - 2 பேது 2:3

31. விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது  
    - 3 யோ :10

32. மாயையைக் குறித்து பேசக்கூடாது  
 - சங் 144:8

33. ஆகாத சம்பாஷணைகள் கூடாத  
 - 1 கொரி 15:33

34. பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது      
- சங் 63:11

35. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
    - சங் 54:4

அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?
*கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.*
 - 1 நாளாகமம் 16:9

*பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;*
 - சகரியா 8:16

*பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.*
 - எபேசியர் 4:29

Comments

Popular posts from this blog

வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉

பணிவு

Exchange Server 2007