வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும்⁉
வேலை ஸ்தலகங்களில் நாம் எப்படி இருக்க வேண்டும் ⁉ வேலைக்காரரே , சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து , நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல் , தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள் . கொலோசெயர் 3 :22 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சசையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு , சகோதரருக்குள்ள சுதந்திரத்தில் பங்கடைவான் . நீதிமொழிகள் 17 :2 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால் , அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் , ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் . நீதிமொழிகள் 22:29 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே , சுதந்தரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்களென்று அறிந்து , எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான் ; பட்சபாதமே இல்லை . கொலோசெயர் 3 :23 ,24,25 வேலைக்...